தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகைகளும் அதன் மருத்துவப் பயன்களும் Traditional Rice of Tamil Nadu

முகவுரை

சங்க காலம் தொட்டு இன்று வரை தமிழர் வாழ்வில் இரண்டறக் கலந்த அரிசியின்  வகைகள், சாகுபடி முறைகள், மருத்துவக் குணங்கள் அறிவியல் மற்றும் புவியியல் உண்மைகளை இந்த தொகுப்பில் காண்போம். 


1. அரிசி: ஒரு அறிமுகம் மற்றும் வரலாறு

  • அரிசி இந்தியாவின் பூர்வீகப் பயிராகும்.
  • உலக அளவில் நெல் உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது.
  • சங்க காலத்தில் நிலத்தை மண் வளத்தின் அடிப்படையில் மென்புலம் (வளமான நிலம்) என்று வகைப்படுத்தினர், இது நெல் சாகுபடிக்கு உகந்தது.
  • தமிழக மக்கள் சங்க காலத்திலேயே நெல் மற்றும் கரும்பு போன்ற பயிர்களைச் சாகுபடி செய்துள்ளனர்.

2. அரிசி தானியத்தின் கட்டமைப்பு

அரிசி தானியம் மூன்று முக்கியப் பகுதிகளைக் கொண்டுள்ளது:

  • மேற்தோல் (Bran): நார்ச்சத்தும் தாது உப்புகளும் நிறைந்தது.
  • முளைச்சூழ்தசை (Endosperm): இதுவே தானியத்தின் மிகப்பெரிய பகுதி (85%). இதில் ஸ்டார்ச் துகள்கள் உள்ளன.
  • முளைக்குருத்து (Germ): இது முளைக்கும் பகுதி, இதில் B வகை உயிர்ச்சத்துக்களும் எண்ணெயும் உள்ளன.


3. ஊட்டச்சத்து மதிப்புகள் (Nutritional Values)

அரிசியில் உள்ள சத்துக்கள் குறித்த விவரங்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன:

சத்துக்கள்அளவு
மாவுச்சத்து (Starch)72% - 75%
புரதம் (Protein)7% (தரமான புரதம்)
சக்தி (Energy)உடலுக்குத் தேவையான சக்தியில் 70-80% வழங்குகிறது
கொழுப்பு1% - 2%
உயிர்ச்சத்துக்கள்B வகை உயிர்ச்சத்துக்கள் (முழு தானியத்தில் அதிகம்)


4. விளையும் சூழல் மற்றும் மண் வகைகள்

  • தட்பவெப்பநிலை: சராசரி வெப்பநிலை 24°C.
  • மழையளவு: ஆண்டு மழையளவு 150 செ.மீ உள்ள பகுதிகள் உகந்தது.
  • மண் வகை: வண்டல் மண் அல்லது வளமான களிமண் அரிசி சாகுபடிக்கு மிகவும் ஏற்றது.
  • தமிழக மண்: தமிழ்நாட்டில் செம்மண் (62%), வண்டல் மண் (16%) மற்றும் கரிசல் மண் (12%) பகுதிகளில் நெல் பயிரிடப்படுகிறது.


5. உற்பத்தி செய்யும் முக்கிய பகுதிகள்

  • இந்தியா: மேற்கு வங்காளம் (முதலிடம்), உத்தரப்பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம்.
  • தமிழ்நாடு: தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், தென்காசி மற்றும் திருநெல்வேலி.
  • சிறப்புப் பெயர்: காவிரி டெல்டா பகுதி (பிரிக்கப்படாத தஞ்சாவூர்) தமிழ்நாட்டின் "நெற்களஞ்சியம்" என்று அழைக்கப்படுகிறது.


6. தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி இரகங்கள் (பட்டங்களுக்கு ஏற்ப)

தமிழ்நாட்டில் வெவ்வேறு பருவங்களுக்கு ஏற்ப பயிரிடப்படும் பாரம்பரிய இரகங்கள்:

பட்டம்பாரம்பரிய இரகங்கள்
நவரைமர நெல், களர்ப்பாலை
கார்புழுதிக்கார், முருங்கை கார், பூங்கார், பெருங்கார், கல்லுருண்டைகார்
குறுவைசூலை குறுவை, சூரன் குறுவை, அறுபதாம் குறுவை
சம்பாசீரக சம்பா, கிச்சிலி சம்பா, மாப்பிள்ளை சம்பா, இலுப்பைப்பூ சம்பா, கருடன் சம்பா
பின் சம்பாகருப்பு கவுணி, குடைவாழை, வால் சிவப்பு
மானாவாரிநூற்றிப்பத்து, நொறுங்கன், காட்டுயானம்


7. அரிசி வகைகள் மற்றும் மருத்துவப் பயன்கள்

  1. புழுங்கல் அரிசி: உமியுடன் வேகவைக்கப்படுவதால் ஊன்மணி அடுக்கில் உள்ள சத்துக்கள் அரிசிக்குள் சென்றுவிடும். இது எளிதில் செரிமானமடையும்.
  2. பழுப்பு அரிசி (Brown Rice): தீட்டப்படாதது. இதில் 100% நார்ச்சத்து மற்றும் தாதுப்பொருட்கள் உள்ளன.
  3. கருப்பரிசி (Black Rice): ஆந்தோசியனின் நிறமி அதிகம் உள்ளது. இது சிறந்த எதிர் ஆக்ஸிஜனேற்றியாகச் செயல்படுகிறது.
  4. சிவப்பரிசி: இதுவும் ஆந்தோசியனின் செறிவு கொண்டது, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
  5. தங்க அரிசி (Golden Rice): மரபணு மாற்றப்பட்ட அரிசி. இதில் உயிர்ச்சத்து A (Beta-carotene) நிறைந்துள்ளது.
  6. இரும்புச் சத்து செறிவூட்டப்பட்ட அரிசி: இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது.

8. சாகுபடி முறைகள்

  • விதைத் தூவல் முறை.
  • ஏர் உழுதல் முறை.
  • நாற்று நடுதல் முறை.
  • திருந்திய நெல் சாகுபடி (SRI): இது 'இராஜராஜன் 1000' என அழைக்கப்படுகிறது. குறைந்த நீர் மற்றும் விதைகளைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெறும் முறை.

💡 உங்களுக்குத் தெரியுமா?

  1. அதிசய அரிசி (IR 8): 1966-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இது மில்லியன் கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றிய அதிக மகசூல் தரும் அரைக்குள்ள நெல் வகை.
  2. பஞ்சங்காட்டி: பனை மரத்தின் குருத்து கருகி பஞ்சத்தை முன்கூறியே உணர்த்தும் என்பதால் அதற்கு இந்தப் பெயர்.
  3. பயோஃபோர்டிஃபிகேஷன்: அரிசியில் இரும்பு, துத்தநாகம் போன்ற சத்துக்களைச் செயற்கையாக அதிகரிக்கச் செய்யும் தொழில்நுட்பம்.
  4. நெல் ஆராய்ச்சி நிறுவனம்: தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI) தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் 1985-ல் தொடங்கப்பட்டது.
  5. நறுமண நெல்: பாசுமதி மற்றும் சீரக சம்பா ஆகியவை தனித்துவமான மணமும் சுவையும் கொண்டவை.
  6. கதிரியக்கப் பாஸ்பரஸ் (P-32): நெல் பயிர் உற்பத்தியை அதிகரிக்க வேளாண்மையில் பயன்படுத்தப்படும் ஐசோடோப்பு.
  7. ஆந்தோசியனின்: கருப்பு மற்றும் சிவப்பு அரிசிக்கு நிறத்தையும் மருத்துவக் குணத்தையும் அளிக்கும் நிறமி.
  8. VGD 1: வைகை அணை பகுதியில் உருவாக்கப்பட்ட நறுமண உயர் விளைச்சல் இரகம்.
  9. சிறு தானியங்கள்: அரிசிக்கு மாற்றாக இதயம் மற்றும் நீரிழிவு நோயைத் தடுக்க தினை, வரகு போன்றவை பயன்படுகின்றன.
  10. முளைகட்டிய தானியங்கள்: இதில் ஆல்பா அமைலேஸ் நொதி அதிகம் இருப்பதால் குழந்தைகளுக்குச் சிறந்த உணவாகும்.

1. கருப்புக் கவுணி அரிசி 

(புற்றுநோயை தடுக்கும் அரிசி வகை)

  • ஒரு காலத்தில் அரசர்களும் அவர்களின் குடும்பத்தினர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த ஓர் அரிசி வகை/
  • மருத்துவ குணம் அதிகம் நிறைந்த  மற்றும் அரிசி வகைகளிலேயே மிக உயர்ந்த அரிசி வகை.
  • கருப்பு நிறத்திற்கு காரணம்:
    • அந்தோசயனைன் (Anthocyanin) என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளதால் கருப்பு நிறத்தில் உள்ளது.

இதிலுள்ள சத்துக்கள்

    • புரதம்
    • நார்சத்து
    • இரும்புச் சத்து
    • வைட்டமின் E
    •  ரிபோப் பிளோவின்
    • நியாசின்
    • லுடீன்
    • கால்சியம்
    • மெக்னீசியம்
    • ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்
    • அமினோ அமிலங்கள்

கருப்புக் கவுணி அரிசியின் மருத்துவப் பயன்கள் 

  • புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் உள்ளது.
  • செரிமானத்தை சீராக்கும்.  இதில் அதிகளவு நார்ச்சத்து  (100 கி. அரிசியில் 4.9 கி நார்ச்சத்து) உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு வராமல் தடுக்கும்.
  • உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும்.  இதனால், இருதயம் சார்ந்த நோய்களை வராமல் தடுக்க உதவும்.
  • கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும்.
  • மூளை மற்றும் நரம்பு மண்டல செயல்பாடுகளை ஊக்குவிக்கும்.
  • இரத்தச் சோகையை குணமாக்கும்.  இதில் 100கி. அரிசியில் 2.2 கி.  இரும்புச் சத்து உள்ளது.
  • இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்களுக்கு இந்த அரிசி வகை மிகவும் நல்லது.
  • உடல் எடையை குறைக்கும்.
  • மன அழுத்தத்தை குறைக்கும்.    மேலும், ஆரோக்கியமான இரத்த அழுத்த அளவை பராமரிக்கும்.
  • நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
  • உடற்சோர்வு, அசதியை தடுத்து, உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது.
  • பெண்களுக்கு கருப்பை ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
  • தலைமுடி உதிர்வை தடுக்கும்.  தோல்களில் ஏற்படும் அலர்ஜியை குணமாக்கும்.
  • கண் பார்வை திறனை அதிகரிக்கும்.
  • எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்கிறது.

2. மாப்பிள்ளை சம்பா அரிசி 

(உடல் பலத்தை அதிகரிக்கும், ஆண்மை குறைபாடு போக்கும் அரிசி)

  • சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்த வகை அரிசி தமிழகத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகம் விளைகிறது.
  • பயிர் வளர்ச்சி காலம்  160 நாட்கள்
  • இரத்தச் சக்கரை அளவு அதிகமுள்ளவர்கள் உண்ணக்கூடியி அரிசி வகை.  இது Low Glycemic Index உடையது.

சத்துக்கள்

  • நார்ச்சத்து, 
  • புரதம், 
  • இரும்புச் சத்து, 
  • துத்தநாகம், 
  • வைட்டமின்பி.6 
  • வைட்டமின் பி.12 

மாப்பிள்ளை சம்பா அரிசியின் மருத்துவப் பயன்கள் 

  • செரிமானத்தை அதிகரிக்கும்.
  • குடல்புண், வயிற்றுப்புண் குணமாகம்.
  • இதில் இரும்புச் சத்து அதிகமுள்ளது.  
  • இரத்தத்தில், ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.  இதனால், உடல் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும்.
  • தசைகள் நரம்புகள் பலப்படும்.
  • இது Low Glycemic Index உடையது என்பதால், சாப்பிடும் உணவானது குளுகோஸாக மாறுவதற்கான நேரம் அதிகமாகும்.  இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக அதிகரிப்பதில்லை.
  • உடல் சூட்டை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது.

3. பூங்கார் அரிசி (பெண்களின் அரிசி)

  • இது பார்ப்பதற்கு மாப்பிள்ளை சம்பா அரிசி தோற்றத்தில், வெளிர் சிவப்பு நிறத்தில் காணப்படும் இவ்வகை அரிசியில் தனிமச் சத்துக்கள் அதிகம் உள்ளன.
  • இது வறட்சி மற்றும் வெள்ளத்தை தாங்கி வளரும் தன்மை வாய்ந்தது.

பூங்கார் அரிசியின் மருத்துவப் பயன்கள்

  • பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் பிரச்சனை அனைத்தும் தீரும்.  கர்ப்பிணிப் பெண்களுக்கான அரிசி வகை.  இந்த அரிசியில் கஞ்சி வைத்து குடித்துவர, சுகப்பிரசவம் ஏற்படும்.
  • தாய்ப்பால் நன்றாக சுரக்கச் செய்யும்.
  • இதில் வைட்டமின் பி.1 உள்ளதால் உடலில் அல்சர் வராமல் பாதுகாக்கும்.
  • உடலுக்கு பலத்தை கொடுக்கும்.
  • பூங்கார் அரிசியில் நார்ச்சத்து அதிகம்.
  • குடல் கட்டிகளை கரைக்கும் தன்மை இதற்கு உண்டு.
  • இரத்தில் ஹீமோகுளோபின் அளவை பராமரிக்கும்.
  • பக்கவாதத்தை குணப்படுத்தும் மேலும், வராமல் தடுக்கும் ஆற்றல் உள்ளது.