தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகைகளும் அதன் மருத்துவப் பயன்களும் Traditional Rice of Tamil Nadu
தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகைகளும் அவைகளின் மருத்துவப் பயன்கள் குறித்து அறிந்துகொள்ளலாம் வாருங்கள்!!!
1. கருப்புக் கவுணி அரிசி
(புற்றுநோயை தடுக்கும் அரிசி வகை)
ஒரு காலத்தில் அரசர்களும் அவர்களின் குடும்பத்தினர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த ஓர் அரிசி வகை/
மருத்துவ குணம் அதிகம் நிறைந்த மற்றும் அரிசி வகைகளிலேயே மிக உயர்ந்த அரிசி வகை.
கருப்பு நிறத்திற்கு காரணம்:
அந்தோசயனைன் (Anthocyanin) என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளதால் கருப்பு நிறத்தில் உள்ளது.
இதிலுள்ள சத்துக்கள்
புரதம்
நார்சத்து
இரும்புச் சத்து
வைட்டமின் E
ரிபோப் பிளோவின்
நியாசின்
லுடீன்
கால்சியம்
மெக்னீசியம்
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்
அமினோ அமிலங்கள்
கருப்புக் கவுணி அரிசியின் மருத்துவப் பயன்கள்
புற்றுநோய் வராமல் தடுக்கும்ஆற்றல் உள்ளது.
செரிமானத்தை சீராக்கும். இதில் அதிகளவு நார்ச்சத்து (100 கி. அரிசியில் 4.9 கி நார்ச்சத்து) உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு வராமல் தடுக்கும்.
உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும். இதனால், இருதயம் சார்ந்த நோய்களை வராமல் தடுக்க உதவும்.
கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும்.
மூளை மற்றும் நரம்பு மண்டல செயல்பாடுகளை ஊக்குவிக்கும்.
இரத்தச் சோகையை குணமாக்கும். இதில் 100கி. அரிசியில் 2.2 கி. இரும்புச் சத்து உள்ளது.
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்களுக்கு இந்த அரிசி வகை மிகவும் நல்லது.
உடல் எடையை குறைக்கும்.
மன அழுத்தத்தை குறைக்கும். மேலும், ஆரோக்கியமான இரத்த அழுத்த அளவை பராமரிக்கும்.
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
உடற்சோர்வு, அசதியை தடுத்து, உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது.
பெண்களுக்கு கருப்பை ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
தலைமுடி உதிர்வை தடுக்கும். தோல்களில் ஏற்படும் அலர்ஜியை குணமாக்கும்.
கண் பார்வை திறனை அதிகரிக்கும்.
எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்கிறது.
2. மாப்பிள்ளை சம்பா அரிசி
(உடல் பலத்தை அதிகரிக்கும், ஆண்மை குறைபாடு போக்கும் அரிசி)
சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்த வகை அரிசி தமிழகத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகம் விளைகிறது.
பயிர் வளர்ச்சி காலம் 160 நாட்கள்
இரத்தச் சக்கரை அளவு அதிகமுள்ளவர்கள் உண்ணக்கூடியி அரிசி வகை. இது Low Glycemic Index உடையது.
சத்துக்கள்
நார்ச்சத்து,
புரதம்,
இரும்புச் சத்து,
துத்தநாகம்,
வைட்டமின்பி.6
வைட்டமின் பி.12
மாப்பிள்ளை சம்பா அரிசியின் மருத்துவப் பயன்கள்
செரிமானத்தை அதிகரிக்கும்.
குடல்புண், வயிற்றுப்புண் குணமாகம்.
இதில் இரும்புச் சத்து அதிகமுள்ளது.
இரத்தத்தில், ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். இதனால், உடல் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும்.
தசைகள் நரம்புகள் பலப்படும்.
இது Low Glycemic Index உடையது என்பதால், சாப்பிடும் உணவானது குளுகோஸாக மாறுவதற்கான நேரம் அதிகமாகும். இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக அதிகரிப்பதில்லை.
உடல் சூட்டை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது.
3. பூங்கார் அரிசி (பெண்களின் அரிசி)
இது பார்ப்பதற்கு மாப்பிள்ளை சம்பா அரிசி தோற்றத்தில், வெளிர் சிவப்பு நிறத்தில் காணப்படும் இவ்வகை அரிசியில் தனிமச் சத்துக்கள் அதிகம் உள்ளன.
இது வறட்சி மற்றும் வெள்ளத்தை தாங்கி வளரும் தன்மை வாய்ந்தது.
பூங்கார் அரிசியின் மருத்துவப் பயன்கள்
பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் பிரச்சனை அனைத்தும் தீரும். கர்ப்பிணிப் பெண்களுக்கான அரிசி வகை. இந்த அரிசியில் கஞ்சி வைத்து குடித்துவர, சுகப்பிரசவம் ஏற்படும்.
தாய்ப்பால் நன்றாக சுரக்கச் செய்யும்.
இதில் வைட்டமின் பி.1 உள்ளதால் உடலில் அல்சர் வராமல் பாதுகாக்கும்.
உடலுக்கு பலத்தை கொடுக்கும்.
பூங்கார் அரிசியில் நார்ச்சத்து அதிகம்.
குடல் கட்டிகளை கரைக்கும் தன்மை இதற்கு உண்டு.
இரத்தில் ஹீமோகுளோபின் அளவை பராமரிக்கும்.
பக்கவாதத்தை குணப்படுத்தும் மேலும், வராமல் தடுக்கும் ஆற்றல் உள்ளது.