மருத்துவக் குறிப்புகள்

 சீரகம்



  • சாப்பிட்ட உணவு செரிக்கச் செய்யும் - சீரகம்.
  • சீர்+அகம் = சீரகம். (வயிற்றையும் அகத்தையும் (மனத்தையும்)  சீர் செய்தல்)
  • சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைசுற்றல், மயக்கம் நீங்கிவிடும்.
  • திராட்சை ஜீஸ்-உடன் சீரகம் கலந்து பருகிவர இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.


  • அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயமாக சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.
  • மோருடன் இஞ்சி, சீரகம், சிறிது உப்பு சேர்த்து பருகினால் வாயுத்தொல்லை நீங்கும்.
  • சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாற்றில் ஒரு நாள் ஊறவைத்து, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டால் பித்தம் மொத்தமாக குணமாகும்.
  • இரண்டு கிராம் சிரகத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வர வாய்ப்புண் குணமாகும்.


சீத்தாப்பழம்



  • சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளைக் கொண்டது.
  • ஆங்கிலத்தில் சீத்தாப் பழத்திற்கு கஸ்டர்ட் ஆப்பிள் என்று பெயர்.
  • சீத்தாப்பழ விதைப் பொடியை தலையில் தேய்த்து குளித்தால் முடி உதிராது.
  • சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்து வந்தால் எலும்பும் பல்லும் உறுதியாகும்.
  • சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும், காசநோய் கட்டுப்படும்.
  • வாதத்தை தீர்க்கும் பழங்களில் முதன்மையானது.
  • இதில் வைட்டமின்கள் பி, சி, மக்னீசியம், நார்ச்சத்து, இரும்புச் சத்துக்கள் நிரம்பியுள்ளன.
  • 100 கிராம் சீத்தாப்பழத்தில்  94 கலோரிகள் உள்ளது


வெண்டைக்காய்




  • வெண்டைக்காயின் சுபாவம் குளிர்ச்சி
  • வெண்டைக்காயுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது.  இது வறண்ட குடலைப் பதப்படுத்தும்.
  • இதில் உள்ள பெக்டின் மற்றும் கோந்துத்தன்மையினால் வழவழப்பாக உள்ளது.
  • இதிலுள்ள பெக்டின் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.


  • இதில்  கார்போஹைட்ரேட், கொழுப்பு, கால்சியம், இரும்புச்சத்துக்கள் வைட்டமின்கள் பி, சி மற்றும் கே ஆகிய உயிர்ச்சத்துக்கள் உள்ளன.
  • வெண்டைக்காய் உண்டு வந்தால் சிறுநீர் பெருகும், சுடு தணியும், உஷ்ணம், இருமல் குணமாகும்.


மாம்பழம்




  • ராஜகனியான மாம்பழம் முக்கனிகளில் முதல் கனியாகும்.
  • மாம்பழத்தின் பூர்வீகம் தென்னிந்தியா தான்.
  • மாம்பழம் உடலுக்கு உஷ்ணம் தரும் பழம்தான்.  ஆனால் சமையலுக்குப் பயன்படுத்தும் புளியில் உள்ள உஷ்ணத்தை விட குறைவு.  
  • நன்கு கனிந்த மாம்பழத்தை உணவு உண்டபின் 20 நிமிடம் கழித்து மட்டுமே சாப்பிட வேண்டும்.
  • இதில் சோடியம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் அதிகமாக உள்ளது.
  • இதில் பொட்டாசியம் மற்றும்  நார்ச்சத்துக்கள் இருப்பதால், ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.