தமிழ்நாட்டின் தொல்லியல் அகழாய்வுத் தளங்கள்...


தமிழ்நாடு தொல்லியல் துறையின் 2024-2025 ஆண்டைய கொள்கை விளக்கக் குறிப்பிலிருந்து தேர்வு நோக்கில் சில தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெற்ற அகழாய்வுகளில் முதல் அகழாய்வு – தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் பறம்பில் நடைபெற்ற அகழாய்வு

2023-ம் ஆண்டில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட சில அகழாய்வுத் தளங்கள்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள – கீழடி மற்றும் கொந்தகை

அரியலூர் மாவட்டத்தில்  உள்ள – கங்கைகொண்ட சோழபுரம்

விருதுநகர் மாவட்டத்தில்  உள்ளவெம்பக்கோட்டை

திருநெல்வேலி மாவட்டத்தில்  உள்ளதுலுக்கர்பட்டி

திருவண்ணாமலை மாவட்டத்தில்  உள்ளகீழ்நமண்டி

புதுக்கோட்டை மாவட்டம்  உள்ளபொற்பனைக்கோட்டை

தருமபுரி மாவட்டத்தில்  உள்ள – பூதிநத்தம்

திருவள்ளூர் மாவட்டத்தில்  உள்ள – பட்டறைப் பெரும்புதூர்


கீழடியில் – 9-ம் கட்ட அகழாய்வில் (2023)


- 804 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

- 14 அகழாய்வுக் குழிகளில் தங்க அணிகலன்கள், தந்தத்தால் செய்யப்பட்ட பகடைகள், சுடுமண்ணால் ஆன விலங்கு உருவங்கள், ஆட்டக்காய்கள், வட்டச்சில்லுகள், பளிங்கு கல்லினால் ஆன எடைக்கல், கண்ணாடி மணிகள், வளையல் துண்டுகள், செப்பு நாணயங்கள், செப்பு ஊசிகள், எலும்பு முனைகள் மற்றும் இரும்பு ஆணிகள் உள்ளிட்டவைகள் கண்டெடுக்கப்பட்டன.


கொந்தகை அகழாய்வுத் தளம் (சிவகங்கை) (2023)-ல் – 4-ம் கட்ட அகழாய்வில்




- முதன்முறையாக, ஓர் ஈமத்தாழிக்குள் இருந்து தந்தத்தால் செய்யப்பட்ட மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

- 24 ஈமத்தாழிகளுக்குள் இருந்து 110க்கும் மேற்பட்ட கருப்பு-சிவப்பு நிற மட்கலன்கள், சிவப்பு பூச்சுப்பெற்ற மட்கலன்கள் ஆகியவற்றுடன் மனித எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

- மேலும் சூதுபவள மணிகள், இரும்புக் கத்திகள், உளிகள், மோதிரங்கள் போன்றவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 


கங்கை கொண்ட சோழபுரம் - (அரியலூர் மாவட்டம்)



- செங்கல் கட்டுமானத்துடன் கூரை ஓடுகள் மற்றும் பானை ஓடுககள்

- இரும்புப் பொருட்கள், செப்புப் பொருட்கள், செப்பு நாணயங்கள், வெள்ளி நாணயங்கள்,  தங்கக் காப்பு, தந்தத்தினால் ஆன பொருட்கள், கண்ணாடி மணிகள் மற்றும் வளையல்கள், வட்டச்சில்லுகள், சுடுமண் பொருட்கள் மற்றும் சீன நாட்டு செலடன் மற்றும் பீங்கான் வகை மட்கலன்கள் கண்டெடுக்கப்பட்டன.


வெம்பக்கோட்டை அகழாய்வுகள் (விருதுநகர் மாவட்டம்)

- சூதுபவளம், அகேட், அமேதிஸ்ட் மற்றும் வெண்பளிங்கு ஆகியவற்றால் செய்யப்பட்ட அரிய கல்மணிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.




2024-ம் ஆண்டில் அகழாய்வு தொடங்கப்படவுள்ள சில அகழாய்வுத் தளங்கள்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள – கீழடி மற்றும் கொந்தகை

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள – வெம்பக்கோட்டை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள – கீழ்நமண்டி

புதுக்கோட்டை மாவட்டம் உள்ள  பொற்பனைக்கோட்டை

தென்காசி மாவட்டத்தில் உள்ள – திருமலாபுரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள – சென்னானூர்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள – கொங்கல்நகரம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள – மருங்கூர்

  

வெளிமாநிலங்களில் அகழ்வாராய்ச்சிகள்

பண்டைய தமிழர்களின் வரலாற்றுத் தடயங்களை கண்டறியும் வகையில், தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ள முக்கிய இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் / அகழாய்வுகள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

அதன்படி,

  • கேரளாவில் முசிறி (பட்டணம்)
  • ஒடிசாவில் பாலூர்
  • ஆந்திராவில் வெங்கி
  • கர்நாடகாவில் மஸ்கி